×

விபத்து வழக்கில் ஜாமீன் கேட்ட தொழிலாளிக்கு டாஸ்மாக் கடையை சுத்தம் செய்யுமாறு நூதன தண்டனை

நெல்லை,மார்ச்7: தச்சநல்லூரை சேர்ந்தவர் நீர்காத்தலிங்கம் (28) தொழிலாளி. இவர் கடந்த மாதம் 12ம் தேதி தச்சநல்லூர் பகுதியில் மதுபோதையில் பைக்கை ஓட்டி சென்றபோது எதிரே வந்த பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இந்த விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிந்து நீர்காத்தலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் நெல்லை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்தார். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2வது முறையாக  ஜாமீன் கேட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜெசிந்தாமார்ட்டின் (பொ) தொழிலாளிக்கு நிபந்தனையின் பேரில்  ஜாமீன் வழங்கினார். மேலும் உத்தரவில் நீர்காத்தலிங்கம் தினமும் நள்ளிரவு 12 மணிக்கு குறுக்குத்துறை டாஸ்மாக் கடையை சுத்தம் செய்ய வேண்டும். இதனை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்ற நூதன தண்டனை  வழங்கி உள்ளார்.

Tags : Tasmac ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்