×

மன்னார்குடியில் போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி

மன்னார்குடி: திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை பேணும் வகையில் மன்னார்குடியில் நடந்த கிரிக்கெட் போட்டிகளை டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோ க்கியராஜ் துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். காவலர்களின் மன அழுத்தத்தை போக்கவும், காவலர்கள் மற்றும் பொது மக்கள் இடையே நல்லுறவை பேணும் வகையிலும் காவல் உட்கோட்டங்கள் வாரியாக விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குமாறு திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார். அதில் ஒருபகுதியாக, மன்னார்குடி காவல் உட்கோட்டம் சார்பில் மன்னார்குடி அரசு உதவி பெறும் பின்லே மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பொதியப்பன் தலைமையிலான காவலர்கள் அணி மற்றும் குட்டி தலைமையிலான பொதுமக்கள் அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடந்தது. இப் போட்டியை டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார். பின்னர், நடந்த பரிசளிப்பு விழாவுக்கு டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், இளைஞர்களுக்கு உடல் திறன் பேணிக் காத்தல் அதன்மூலம் கிடைக்கப் பெறும் பலன்கள் ஆகியவற்றை எடுத்து ரைத்தார்.



Tags : Public Relations Cricket Match ,Mannargudi ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...