×

ஆலோசனை கூட்டத்தில் கும்பகோணம் டிஎஸ்பி தகவல் நீதிமன்ற உத்தரவின்படி எஸ்இடிசி இடத்தில் இயங்கி வந்த டூவீலர் ஸ்டாண்டுக்கு சீல் வைப்பு

தஞ்சாவூர்: நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் நிறுத்தும் ஸ்டாண்ட் இடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தஞ்சை பழைய பேருந்துநிலையம் அருகில் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் செங்குட்டுவன் என்பவர் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் ஸ்டாண்ட் வைத்து இருந்தார். ஒப்பந்த காலம் 2020ம் ஆண்டு முடிந்த நிலையில் இடத்தை அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருசக்கர வாகனம் நிறுத்தும் ஸ்டாண்ட் இடத்தை 7 நாட்களில் பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கெடு கடைசி நாளான நேற்று காவல்துறையினர் பாதுகாப்புடன் அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தை கையகப்படுத்தி பூட்டி சீல் வைத்தனர். இதையடுத்து புதிய வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்த சைக்கிள் நிறுத்தும் ஸ்டாண்ட்டில் ஏற்கனவே வாகனத்தை நிறுத்தியவர்கள் வாகனத்தை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Kumbakonam ,SETC ,
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்