×

திருநள்ளாறில் மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

காரைக்கால்: திருநள்ளாறில் மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலியானார். திருநள்ளாறு கமலம்பாள் நகரை சேர்ந்தவர் தமிழரசன் (63). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. தமிழரசன் மிதிவண்டி பழுது பார்க்கும் தொழில் செய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால், வீட்டில் இருந்து வருகிறார். அனிதா அங்கன்வாடி உதவியாளராக பணி செய்து வருகிறார். தமிழரசனுக்கு குடிபழக்கம் உண்டு. இந்நிலையில், நேற்று முன்தினம், அனிதா கடைவீதிக்கு சென்றபோது, உறவினர் ஒருவர், அனிதாவிற்கு போன் செய்து, தமிழரசன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளார். விரைந்து சென்ற அனிதா, உறவினர்கள் உதவியுடன், தமிழரசனை 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தமிழரசனை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து தமிழரசன் மனைவி அனிதா திருநள்ளாறு காவல்நிலையத்தில் தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags : Thirunallar ,
× RELATED பிரமோற்சவ விழாவின்போது திருநள்ளாறு...