×

முத்தூர் அருகே செல்போன் திருட்டு

காங்கயம்:முத்தூர்-காங்கயம் ரோடு வாய்க்கால் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி  பிரபாகரன். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் கதவை சாத்திவிட்டு இருந்துள்ளார். வீட்டில் இருந்த அறையில் படுத்து தூங்கியுள்ளார். பின் நேற்று காலை 6 மணிக்கு கதவு திறந்திருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஹாலில் வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் டிராவில் இருந்த பணம் ரூ.6 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Muttur ,
× RELATED அரசு இட ஒதுக்கீட்டின் மூலம் முத்தூர்...