×

பசுபதிபாளையம் பாலத்தின் நடைபாதையில் படுத்து தூக்கும் மதுபிரியர்கள்

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் உயர்மட்ட பாலத்தின் நடைபாதையில் இரவு நேரங்களில் சிலர் குடிபோதையில் படுத்து தூங்கும் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் அருகே அமராவதி ஆறு பயணிக்கிறது. கரூர் மற்றும் பசுபதிபாளையம் போன்ற பகுதிகளை இணைக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் பயன்பாட்டில் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், பாலத்தின் இருபுறமும் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை உள்ளது.

இந்த நடைபாதையில் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத சிலர், குடீத்து விட்டு, நடைபாதையில் தூங்குவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காலை நேரங்களில் நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த உயர்மட்ட பாலத்தின் நடைபாதையை பார்வையிட்டு, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Pasupathipalayam bridge ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...