×

இது திராவிட மாடல் ஆட்சி உதயநிதி ஸ்டாலின் யானை பலம் கொண்டவர்

கரூர்: இது திராவிட மாடல் ஆட்சி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யானை பலம் கொண்டவர் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் 1லட்சத்து 22ஆயிரத்து 19 பயனாளிகளுக்கு ரூ. 267 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் கவிதா, எல்எல்ஏக்கள் சிவகாமசுந்தரி, இளங்கோ, மாணிக்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், தமிழக முதல்வர் ஏற்கனவே, கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பெருமை சேர்த்துள்ளார். அவர் வழியில், இப்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் 1லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 267 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். இது திராவிட மாடல் ஆட்சி, எல்லாருக்கும் எல்லாமுமான அரசு இது.

கரூர் மாவட்டத்திற்கு பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்திருந்த சிறப்பு திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். அரசு வேளாண்மை கல்லூரி, அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி, குளித்தலையில் அரசு மருத்துவமனை தரம் உயர்த்துவதற்கான உத்தரவு தரகம்பட்டியில் அரசு கல்லூரிக்கு கட்டிட பணிகள் என 4 தொகுதிகளுக்கும் ஒரே சமமாக தமிழக முதல்வர் உதவிகளை வழங்கியுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் யானை பலம் கொண்டவர். தந்தை வழியில் அவர் உழைப்பு, உழைப்பு என செயல்பட்டு வருகிறார். அவர் பெறும் மனுக்கள் அனைத்தும் நேரிடையாக சென்னைக்கு அனுப்பப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றபட்டு வருகிறது. மேலும், கரூர் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த கோரிக்கைகளை வைத்துள்ளோம், அதை நிறைவேற்றித் தருவார் என்றார்.

Tags : Udayanidhi Stalin ,
× RELATED திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க...