சிவன் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு

சாயல்குடி, மார்ச் 5: சனி பிரதோஷத்தை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோயிலுள்ள நந்தியம் பெருமானாருக்கு மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு, திரவியப்பொடி, பால், சந்தனம், நெய், விபூதி உள்ளிட்ட 18 பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, தாழம்பூ சாற்றி பூஜைகள் நடந்தன. மாலை கோயில் உள்பிரகாரத்தில் ரிஷப வாகன ஊர்வலம் நடந்தது. இதனை போன்று ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர், முகவை ஊரணி விசலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயில், நயினார்கோயில் சவுந்தரநாயகி அம்மன் உடனுறை நாகநாதர்,

சாயல்குடி மீனாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர், மாரியூர் பவளநிற வள்ளியம்மன் உடனுறை பூவேந்தியநாதர், ஆப்பனூர் குழாம்பிகை உடனுறை திருஆப்பநாதர், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி அம்மன் உடனுறை செஞ்சிடைநாதர், மங்களம் ரேணுகாம்பாள் உடனுறை ஆதிசிவன் உள்ளிட்ட சிவன் கோயில்களிலுள்ள நந்தியம் பெருமானாருக்கு மஞ்சள், பால், தேன், இளநீர் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன், வில்வ அர்ச்சனை மற்றும் மகா தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: