×

ஒட்டன்சத்திரம் அருகே காட்டு யானை தாக்கி கன்று பலி: மக்கள் பீதி

ஒட்டன்சத்திரம், மார்ச் 5: ஒட்டன்சத்திரம் அருகே ேதாட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் கன்று குட்டி உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தா.புதுக்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார். நேற்று முன்தினம் இரவு இவரது தோட்டத்தில் கன்று குட்டி ஒன்று கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில், இத்தோட்டத்திற்கு காட்டு யானை ஒன்று கன்று குட்டியை தாக்கியது.

இதில் கன்று குட்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தது. தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவர் கன்று குட்டியின் பிரேதத்தை பரிசோதனை செய்தார். தொடர்ந்து செந்தில்குமார் தோட்டத்திலே கன்று குட்டியை புதைத்தனர். காட்டு யானை தாக்கி கன்று குட்டி இறந்த சம்பவத்தால் இப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். காட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Calf ,Otanchatram ,
× RELATED ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து...