×

புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்களுக்கு உயர் தரத்தில் மருத்துவ சிகிச்சை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்களுக்கு உயர் தரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம், அமைச்சர் ரகுபதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட கலெக்டர் (பொ) செல்வி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவத்துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார்.

மேலும் பொதுமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் கிடைப்பது உறுதிசெய்யும் வகையிலும், மருத்துவத்துறைக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மருத்துவர்கள், மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மூலம் தேவைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மருத்துவர்கள் தெரிவித்த தேவைகள் அனைத்தும் நிறைவேற்றிடும் வகையில், பொதுமக்களின் உடல் நலனில் அக்கரைக்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவத்துறைக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள், உயிர்காக்கும் உபகரணங்கள், அடிப்படைத் தேவைகள் உள்ளிட்டவைகள் நிறைவேற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் ‘நமக்கு நாமே” திட்டத்தின் மூலம் பொதுமக்களின் பங்களிப்புடன் தேவையான பகுதிகளில் மருத்துவத்துறை கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவப்பணிகள் அனைத்து தொய்வில்லாத வகையில் செயல்பட்டு பொதுமக்களுக்குத் தேவையான உயர் தரத்திலான சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அற்கான உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இத்தகைய நலத் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) ராமு, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்). ராம்கணேஷ், மரு.கலைவாணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Pudukottai ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...