×

கொடைக்கானலில் அம்பேத்கர் அமைப்புசாரா தொழிலாளர் நல அமைப்பு பொதுக்குழு கூட்டம்

கொடைக்கானல், மார்ச் 4: கொடைக்கானல் மூஞ்சிக்கல் கூட்ட அரங்கில் கோடைமலை அம்பேத்கர் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிளாலர்கள் நல உரிமை சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. வயல்வழி தெரு கிளை செயலாளர் முருகலட்சுமி வரவேற்றார். சங்க தலைவர் அழகு சிவகாமி தலைமை வகித்து உரையாற்றினார். சங்க துணை தலைவர் வேளாங்கன்னி முன்னிலை வகித்து சங்கத்தின் கொள்கை, நோக்கம் பற்றி பேசினார். சங்க செயலாளர் திருமுருகன் கடந்த 2022ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த பின்பு அனைவராலும் ஏற்று ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து கஸ்தூரிபாய்புரம் கிளை செயலாளர் நர்மதா, டர்னர்புரம் கிளை தலைவர் ராணி, கோவில்பட்டி கிளை செயலாளர் செல்லத்தாய், மன்னவனூர் கிளை பொருளாளர் சுதா, பட்டாளம்மன் தெரு சங்க உறுப்பினர் நீலாவதி, மங்களம்கொம்பு கிளை பொருளாளர் செல்லம்மாள், தெரசா நகர் கிளை தலைவர் பாண்டிமீனா ஆகியோர் கிளைகளில் உள்ள பிரச்னைகள், நலவாரிய திட்ட சலுகைகள், சங்க உறுப்பினர்கள் விபரம், கிராம சபை பங்கேற்பில் ஈடுபட்டு செயலாற்றியது பற்றிய கருத்து பகிர்வினை பகிர்ந்து கொண்டனர். இதில் மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் இருந்து 25 கிளைகளின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிர்வாக குழு உறுப்பினர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

Tags : Ambedkar ,Labor ,Welfare Organization ,Kodaikanal ,
× RELATED அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி...