×

(தி.மலை) பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது 400 கிராம் கஞ்சா பறிமுதல் ஜமுனாமரத்துர் அருகே

போளூர், மார்ச் 3: ஜமுனாமரத்துர் அருகே மோட்டார் பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியை சேர்ந்தவர் அனந்தபாஸ்கர்(22). ஜமுனாமரத்துர் அடுத்த பால்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(32). இருவரும் நண்பர்கள். இந்நிலையில் புதுச்சேரியிலிருந்து ஜமுனாமரத்துர் வந்த அனந்தபாஸ்கர் நண்பருடன் இணைந்து கஞ்சா வாங்கி கொண்டு மோட்டார் பைக்கில் புதுச்சேரி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதயைடுத்து ஜமுனாமரத்துர் கோவிலுர் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது, மோட்டார் பைக்கில் வந்த இருவர்களையும் போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். இதில், அனந்தபாஸ்கர் போலீசாரிடம் பிடிபட்டார். அவருடன் வந்த நண்பர் சங்கர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார். இதையடுத்து போலீசார் அனந்த பாஸ்கரனிடம் இருந்த 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் அவரை கைது செய்தனர். மேலும், அவர்கள் வந்த மோட்டார் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சங்கரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஜமுனாமரத்துர் பகுதியில் அதிக கஞ்சா பயிரிடுவதாக சிலர் தெரிவித்துள்ளனர். தற்போது ஜவ்வாதுமலை பகுதியில் கள்ளச்சாரயத்தை விட கஞ்சா நன்கு விற்பனையாவதால் அதிகமாக கஞ்சா பயிரிடப்படுகிறது. இதை போலீசார் கண்டு பிடித்து முழுமையாக அழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : T.Malai ,Jamunamarathur ,
× RELATED (தி.மலை) எருது விடும் விழாவில்...