கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பறக்கும்படை தனி தாசில்தார் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள், குருபரப்பள்ளியில் இருந்து கொத்த கிருஷ்ணப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள புளியஞ்சேரி கிராமத்தில், நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்திய அதிகாரிகள், சோதனை செய்தனர். அப்போது வேனில் பூண்டு மூட்டைகளுக்கு அடியில் 21 பைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் பங்காருபே்டை தொப்பனப்பள்ளியை சேர்ந்த ஜெகதீஷ்(27) என்பது தெரியவந்தது. கரூர் மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.