×

தேசிய பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தொழிலாளர்கள், பொதுமக்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

திருச்சி: திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது,தேசிய பாதுகாப்பு குழுமம் இந்திய அரசால் 1966 மார்ச் 4ம் தேதி துவங்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் 1972ம் ஆண்டிலிருந்து நமது நாட்டில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 4ம் தேதி ஒரு சிறப்பான கருப்பொருள் உடன் தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்தாண்டு மார்ச் 4ம் தேதி 52வது தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடத்தின் கருப்பொருள் எங்களின் நோக்கம் - பூஜ்ஜிய தீங்கு ஆகும்.


Tags : National Safety Week ,
× RELATED வலைபோட்டு மடக்கி பிடித்தனர்...