×

உலக நன்மை வேண்டி நாகநாத சுவாமி கோயிலில் சண்டி மகா யாகம்

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரத்திலுள்ள ராகு பகவான் கோயில் எனும் நாகநாத சுவாமி கோயிலில் உலக நன்மைக்காக சண்டி மகா யாகம் 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளான நேற்று முன்தினம் மாலை மகா கணபதி பூஜை, சப்தசதி பாராயணம், 64 யோகினி, 64 பைரவ பலி ப்ரதானம், பூர்ணாஹூதியும் தீபாபாரதனையும் நடைபெற்றது.தொடர்ந்து நேற்று யதோக்த நவாவரண, கஜ, அஸ்வ, கோபூஜை, பிரம்மச்சாரி, கன்யா, வடுக, சுவாஸினி பூஜைகளும், கிரிகுஜாம்பிகையம்மன் ப்ரோஷணமும், துர்க்கையம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும், தயிர் பள்ளயமும் நடைபெற்றது. மாலை கிரிகுஜாம்பிகை சன்னதியில் 108 குத்துவிளக்குப் பூஜை நடைபெற்றது. துணை ஆணையர் உமாதேவி, உதவி ஆணையர் ராணி மற்றும் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : Chandi Maha Yagam ,Naganath Swamy Temple ,
× RELATED நாகையில் கோயில், கோயிலாக சசிகலா சுவாமி தரிசனம்