×

ஆளுநர் ரவியை கண்டித்து பட்டுக்கோட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை: கம்யூனிஸ்ட் இயக்கத்தின் காரல் மார்க்ஸின் தத்துவத்தை பற்றி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் அவதூறு கருத்துக்களை பரப்பியதை கண்டித்து நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் அறந்தாங்கி ரோடு முக்கம் காந்தி சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பூபேஷ்குப்தா, நகர செயலாளர் விஜயன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பக்கிரிசாமி, கலியபெருமாள், முன்னாள் நகர செயலாளர் ரோஜாராஜசேகரன், மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், தனசீலி, காளிதாஸ், பாலசுப்பிரமணியன், ஜானகி, தங்கஜெயராமன், வாசன், வழக்கறிஞர் பிரகாசம், தர்மராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பஷீர் நன்றி கூறினார்.இதேபோல, தலைமை தபால் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நீலமேகம், செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மோரீஸ்அண்ணாதுரை, சாமிநாதன், ஞானசூரியன், பெஞ்சமின், சிஐடியூ தனபால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags : Communist Party ,Governor Ravi ,Pattukottai ,
× RELATED திருப்பூரில் பாஜக அராஜகம்: தேர்தல்...