×

கும்பகோணத்தில் மாவட்ட போட்டிகள்

கும்பகோணம்: கும்பகோணத்தில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இந்திய அரசு நேரு யுவகேந்திரா தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் விவேகானந்தா கலாம் யூத் கிளப் ஒருங்கிணைப்பில் கும்பகோணம் அன்னை கல்லூரி மைதானத்தில் தஞ்சாவூர் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திராவின் துணை இயக்குநர் திருநீலகண்டன் தலைமை தாங்கினார்.கும்பகோணம் விவேகானந்தா கலாம் பவுண்டேசன் தலைவர் கணேசன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி மற்றும் இந்தியன் செஞ்சிலுவை சங்க தலைவர் ரொசாரியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பிக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம் மற்றும் கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களை வாழ்த்தி போட்டியை துவக்கி வைத்தார்கள்.இப்போட்டிகளில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர் மன்ற அணிகள், ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்த அணிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவர்களின் அணிகள் என சுமார் 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கபடி, வாலிபால், கோ-கோ மற்றும் இருபாலருக்கும் தனிநபர் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது.இதில் மாணவர்கள், ரெட்கிராஸ், தேசிய இளையோர் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரியின் துணை முதல்வர் ராஜா, இளஞ்செழியன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் முத்து நன்றி கூறினர்.

Tags : Kumbakonam ,
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்