×

தஞ்சாவூர் அருகே ரயிலில் அடிபட்டு பெண் பலி தற்கொலையா? போலீசார் விசாரணை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ரயிலில் அடிபட்டு பெண் பலியானார். ரயிலி்ல் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் தஞ்சாவூர் அடுத்து குளிக்கரை கொரடாசேரிக்கு இடைப்பட்ட ரயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி சடலமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தஞ்சாவூர் ரயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவுப்படி, சிறப்பு காவல் துணை ஆய்வாளர் குமார், சுரேஷ் , ஏட்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை பார்வையிட்டனர். ஆனால் இறந்து கிடந்தவர் யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை.இதையடுத்து அந்த பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டவாளத்தை கடக்க முயலும் போது, ரயிலில் அடிபட்டு அந்த பெண் இறந்தாரா அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...