×

வேதாரண்யம் அருகே விவசாயி வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் கொள்ளை

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே விவசாயி வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தை சேர்ந்தவர் தங்கராசு(58). விவசாயி. இவரது மனைவி சக்தி(48). மகன் பிரேம்நாத்(30), மகள் பிரேமலதா(28). இவர்கள் 4 பேரும் நேற்றிரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு வெளிவாசலில் தூங்கினர். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் உள்ளே பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து வேதாரண்யம் காவல்நிலையத்தில் தங்கரசு கொடுத்த புகாரின் வேதாரண்யம் டி.எஸ்பி முருகவேல், இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடதிற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தட அறிவியல் பிரிவு டிஎஸ்பி அனந்தி, இன்ஸ்பெக்டர் சங்கவி மற்றும் கைரேகை நிபுணர் குழுவினர் வந்து தடயங்களை சேகரித்னர். நாகப்பட்டினத்தில் இருந்து மேப்பநாய் தூளிப் வரவழைக்பட்டு வீட்டில் இருந்து மேப்பம்பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்