சீர்காழி: தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்படி 1 முதல் 5ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு காலை உணவு 7 நகராட்சி பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது மேலும் இந்தத் திட்டத்தில் பனங்காட்டாங்குடி சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளி, ஊழியக்காரன் தோப்பு நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் சேர்க்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், நகராட்சி பொறியாளர் சித்ரா, பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், கவுன்சிலர் கஸ்தூரிபாய், இளநிலை உதவியாளர் பாபு, தலைமை ஆசிரியர் கலந்து கொண்டனர்.