×

வளநாடு அருகே துணிகரம் அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

துவரங்குறிச்சி,மார்ச் 2: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த வளநாடு அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நாலரை பவுன் நகை மற்றும் ரூ.17 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மருங்காபுரி ஒன்றியம் வலசுப்பட்டியில் வசித்து வருபவர் ராமகவுண்டர் மகன் சண்முகம்(46). இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் நேற்று சண்முகம் வேலைக்கு சென்ற நிலையில், அவரது மனைவி 100 நாள் பணிக்கு சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து வீட்டிலிருந்த அவரது மகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு பிற்பகலில் வீடு திரும்பினார். அப்போது, வீடு திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நாலரை பவுன் மதிப்பிலான 10 மோதிரங்கள் மற்றும் ரூ.17 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுபற்றிய புகாரின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வளநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Jewels ,Valanadu ,
× RELATED ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம்...