×

வெண்பொங்கல், காய்கறி சாம்பார் பரிமாறப்பட்டது தஞ்சாவூர் பகுதியில் தென்னங்குருத்து விற்பனை அமோகம்

தஞ்சாவூர், மார்ச் 2: தஞ்சாவூர் பகுதியில் தென்னங்குருத்து விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மேலும் மருத்துவக்குணம் கொண்டதால் ஒரு துண்டு ரூ.50க்கு ஆர்வமுடன் வாங்கி பொதுமக்கள் சாப்பிடுகின்றனர். தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள குழந்தை இயேசு கோயில் பகுதிகளில் வாகனங்கள் மூலம் தென்னங்குருத்து விற்பனை நடந்து வருகிறது. தென்னையில் குருத்து பகுதியான மேல் பகுதியை கொண்டு வந்து சீவி துண்டுகளாக திருச்சி பகுதியை சேர்ந்தவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இயற்கை உணவு, மருத்துவ குணம் நிரம்பியது. தென்னங்குருத்து ஒரு துண்டு ரூ.50 என விற்கப்படுகிறது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், நான் திருச்சியில் இருந்து தென்னங்குருத்துகளை லோடு ஆட்டோக்களில் ஏற்றி வந்து, தஞ்சாவூரில் தள்ளுவண்டி விற்பனை செய்து வருகிறேன். 10 வருடங்களாக இந்த தொழில் செய்து வருகிறேன். தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் சென்று விற்பனை செய்து வருகிறேன். வெயில் காலத்தில் மட்டும் தான் இதை விற்பனை செய்ய முடியும்.

தென்னங்குருத்து, சர்க்கரை நோய், கல் அடைப்பு, பசியின்மை, அல்சர், வாய்ப்புண், உடல் உஷ்ணம், வெள்ளைபடுதல், வாய்ப்புண் , கண்ணெரிச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாகும். இனிப்பு சுவையுடன் உள்ளதால் நேரடியாக உட்கொள்ளலாம். பல்வேறு காரணங்களுக்காக வெட்டப்பட வேண்டிய தென்னை மரங்களை விலைக்கு வாங்கி, குருத்து பகுதியான மேற்பகுதியை மட்டும் கொண்டு வந்து சீவி விற்பனை செய்து வருகிறோம். மக்களும் ஆர்வமாக வாங்கி உண்கின்றனர் என்றனர்.

Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூரில் பட்டப்பகலில் பரபரப்பு...