×

ஊத்துக்கோட்டையில் மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, ஊத்துக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் ஊத்துக்கோட்டை வழக்கறிஞர் சங்கம், தேசிய ஆணையத்தின் மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜி.செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். முன்னதாக வழக்கறிஞர் சங்க தலைவர் ஏ.சீனிவாசன், செயலாளர் முனுசாமி, பொருளாளர் தினகரன் ஆகியோர் வரவேற்றனர்.

அரசு வழக்கறிஞர்கள் வெஸ்லி, வசந்த்,   வெற்றிதமிழன், ஷீபா, வித்யா, பத்மினி, மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்தியபாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆனைக்குழு சார்பு நீதிபதி பி.வி.சாண்டில்யன் கலந்து கொண்டு பேசுகையில், ‘பெண்களுக்கான உரிமைகள், திட்டங்கள், தொழில் முனைவோரை மேம்படுத்துதல் வேண்டும். பெண் குழந்தைகள் நிலையை உயர்த்த வேண்டும். பெண்களுக்கு எப்போது துயரங்கள் நடந்தாலும், அவற்றில் இருந்து அவர்களை காக்க சட்டம் இயற்றப்படுகிறது’ என்றார். இறுதியில், தலைமை எழுத்தர் நன்றி கூறினார்.

Tags : Uthukottai ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு...