×

கண்ணந்தன்குடி கீழையூர் கிராமத்தில் வயலுக்கு வேலை சென்ற கூலித்தொழிலாளி மர்மச்சாவு

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே கண்ணந்தன்குடி கீழையூர் கிராமத்தில் வயலுக்கு வேலைக்குச் சென்ற விவசாயக் கூலித் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தும்பைக்கோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் நடராஜன் (53). இவர் கடந்த 2 ஆண்டு காலமாக தனது மருமகன் வீடான ஒரத்தநாடு அருகே உள்ள எழந்த வெட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவரது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை நடராஜன் கண்ணந்தன்குடி கீழையூர் கிராமத்தை சேர்ந்த சிவராமன் என்பவரது வயலுக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் தெரிவித்து சென்றுள்ளார். வயலுக்கு வேலைக்குச் சென்ற நடராஜன் இறந்து கிடப்பதாக சிவராமனின் டிராக்டர் டிரைவர் பாரதி என்பவர் நடராஜனின் மருமகன் ஆறுமுகத்திற்கு தகவல் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தகவலின் பேரில், ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் நடராஜன் இறந்த வயலுக்கு சென்று பார்த்து கதறி அழுதுள்ளார். மேலும், இதுகுறித்து ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் நடராஜனின் சடலத்தை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல், மருமகன் ஆறுமுகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் தனது மாமனாரின் சாவில் மர்மம் இருப்பதாக ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயலுக்கு வேலைக்குச் சென்ற முதியவர் மர்மமான முறையில் இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Marmachau ,Kannankudi Geeyoyur ,
× RELATED தர்மபுரி அருகே மாஜி ராணுவ வீரர் மர்மச்சாவு உடலை மீட்டு விசாரணை