×

தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் சரண்


உளுந்தூர்பேட்டை,  பிப். 28:  தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜபுரம் பகுதியை  சேர்ந்தவர் முத்துக்குமார்(45). வழக்கறிஞர். இவர், ஒரு வழக்கு தொடர்பாக தனது  சகோதரருடன் தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு கடந்த மாதம் சென்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒரு  கும்பல், முத்துக்குமாரை வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கு தொடர்பாக 13  பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்த நிலையில் நேற்று முக்கிய  குற்றவாளியான தூத்துக்குடி கோரிப்பாளையத்தை சேர்ந்த ஜெயராமன் மகன்  ரமேஷ்(49) என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்  நீதிபதி விஜயராஜேஷ் முன் சரண் அடைந்தார். அவரை கைது செய்த உளுந்தூர்பேட்டை  போலீசார், கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

Tags : Saran ,Ulundurpet ,
× RELATED அம்பத்தூர் பேருந்து நிலையம் ₹12...