திருச்சுழியில் கபடி போட்டி

திருச்சுழி, பிப். 28: திருச்சுழி அருகே உள்ள ஆலடிபட்டியில் நேதாஜி கபாடி கிளப் மற்றும் கிராம பொது மக்கள் இணைந்து கபடி போட்டி நடத்தினர்.இப்போட்டியில் திருச்சுழி சுற்றியுள்ள 51 கிராம இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தோனுகாலை சேர்ந்த கபாடி அணியினர் கலந்து கொண்டு முதல் பரிசான 5 அடி உயரமுள்ள கப் மற்றும் மெடல் ஐந்தாயிரம் ரூபாயை பரிசை தட்டிச்சென்றனர்.

இரண்டாம் பரிசான நான்கு அரை உயரமுள்ள கப் மற்றும் நான்காயிரம் பணத்தை இராமசாமிபட்டியை சேர்ந்த இளைஞர்கள் தட்டிச்சென்றனர். மூன்றாம், நான்காவாதாக வெற்றிபெற்ற சித்தலக்குண்டு மற்றும் ஆலடிபட்டி சேர்ந்த அணியினருக்கு நான்கு அடி உயரமுள்ள கப்புகள் மற்றும் மூன்றாயிரம் பணம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை காண சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Related Stories: