மதுரை, பிப்.28: முன்னாள் சபாநாயகர் பிடிஆர்.பழனிவேல்ராஜனின் 91வது பிறந்தநாளையொட்டி நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் 91வது பிறந்த தினம், மதுரையில் நேற்று கொண்டாடப்பட்டது.
மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பழனிவேல் ராஜனின் சிலைக்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் வேலுசாமி, குழந்தைவேலு, அக்ரி கணேசன், மிசாபாண்டி, சிவக்குமார், காத்தவராயன், இளைஞரணி வக்கீல் ராம்பிரசாத் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். அதனைத்தொடர்ந்து, அன்பகம் சிறப்பு பள்ளி மற்றும் என்எம்ஆர்.சுப்புராமன் நினைவு உண்டு உறைவிட பள்ளி, சேவாஸ்ரமம் ஆகிய இடங்களில் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அன்னதானம் வழங்கினார்.