கோவை: கோவை அரசு கலைக் கல்லூாரியில் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சீரபாளையம், வெள்ளலூர், பள்ளப்பாளையம், கண்ணம்பாளையம் அரசு பள்ளிகளை சார்ந்த 60 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் உலகி முன்னிலை வகித்தார். கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீரமணி சிறப்புரை ஆற்றினார்.
பல்வேறு துறைத்தலைவர்கள் தங்கள் துறையின் சிறப்பம்சங்கள், ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை பற்றி விரிவாக விளக்கினார்கள். பின்னர், மாணவர்கள் அனைத்து துறைகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு துறை சார்ந்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்பட்டது. மாணவர்கள் இந்நிகழ்ச்சி தங்களுக்கு பெரிதும் பயணுள்ளதாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும் கூறினார்கள்.