×

கோவையில் இன்ஸ்டாகிராமில் பழக்கம் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் போக்சோவில் கைது

தொண்டாமுத்தூர், பிப்.27: கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒரு கோயில் திருவிழாவுக்கு சென்றபோது இன்ஸ்டாகிராமில் பழங்கி 19 வயது கல்லூரி மாணவரை சந்தித்தார். அதன் பின்னர் நட்பு நெருக்கமானது. இந்நிலையில் மாணவர் சிறுமியை திருமணம் மற்றும் காதல் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தார்.
சில நாட்களுக்கு பின்னர் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதனையடுத்து சிறுமி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : POCSO ,Coimbatore ,
× RELATED பூந்தமல்லி அருகே பள்ளி வேனில்...