×

ஈரோடு உலக அமைதிக்கான அமைதி ஊர்வலம்

கோபி,பிப்.27: கோபி பேருந்து நிலையத்தில் உலக அமைதிக்கான அமைதி ஊர்வலம் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. உலக அமைதிக்காகவும், சாதி, மத வேறுபாடுகளை களைவதன் அவசியத்தை வலியுறுத்தி கோபியில் உள்ள பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில் கோபி பேருந்து நிலையத்தில் அமைதி ஊர்வலம் தொடங்கியது.

பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில், மருத்துவர் ராமச்சந்திரன், டாக்டர்.ரமேஸ்பாபு, பிரியா மோகன் ஆகியோர் முன்னிலையில் ஆடிட்டர் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணியானது பேருந்து நிலையத்தில் தொடங்கி, சரவணா திரையரங்கு சாலை, கடை வீதி, வழியாக ராஜ யோக தியான நிலையத்தை அடைந்தது. அதைத்தொடர்ந்து அங்கு சிவ ஜெயந்தி கொடியேற்றப்பட்டது. பேரணியில் பிரம்மா குமாரிகள் இயக்ககத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு உலக அமைதியின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச்சென்றனர்.

Tags : Erode ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...