×

திருத்துறைப்பூண்டியில் ரூ.22 கோடியில் புறவழிச்சாலை பணி விறுவிறுப்பு

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை திட்டப்பணிகள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை பணிக்கு ரூ 20.40 கோடியில் சாலை பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருத்துறைப்பூண்டி புதியபேருந்து நிலையத்தில் இருந்து வேதாரண்யம் சாலை வரை ஒரேசாலைதான். இந்த சாலையிலிருந்து தான் மன்னார்குடி, நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பிரிவு நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி தெரு சாலைகள் உள்ளது. நகரில் வாகன போக்குவரத்து அதிகமாக வருவதாலும் சாலைகளில ஆக்கிரமிப்புகள் உள்ளதாலும் இந்த ஒரே சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவரச தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் கூட போக முடியாமல் சில நேரங்களில் சிக்கி கொள்ளும் நிலையும் இருந்து வருகிறது. இதனை போக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலை வேளூர் பாலத்திலிருந்து நாகை பைபாஸ் சாலை வரை 2.6 கி.மீ. புறவழிச்சாலை அமைப்பதற்கு ரூ.7 கோடி 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆயத்தப் பணி தொடங்கப்பட்டது. புறவழிச்சாலை செல்லும் இடங்களில் உள்ள நிலங்கள் அறநிலையத்துறைக்குசொந்தமானதாகும். நிலங்களுக்கான மதிப்பீடு தொகை நிர்ணயிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் பணி நின்றுபோய் நிதியும் திரும்பி போய்விட்டது. இந்நிலையில் மீண்டும் புறவழிச்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்த ரூ.4 கோடி 72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய திட்ட மதிப்பீடு செய்து அனுப்பப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள புறவழிசலை பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்க வேண்டும் என்று வர்த்தக சங்கம், அரசியல் கட்சியினர், சேவை அமைப்புகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் புறவழிச்சாலை பணிக்கு ரூ 20.40 கோடி நிதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. நெடுஞ்சாலைதுறைசார்பில் புறவழிச்சாலை பணிகள் கடந்த மே மாதம் துவங்கியது. இந்த சாலையில் 19 சிறுப்பாலங்கள் (கல்வெட்டு)அமைக்கும் பணியில் 19 பாலங்கள் பணி முடிந்துவிட்டது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்ப்பார்வையில் புறவழிச்சாலை பணி விறுவிறுப்பாக நடைபெற்றுகிறது. மேலும் புறவழிச்சாலை பணி நிறைவேற்விட்டால் திருத்துறைப்பூண்டியில் ஏற்ப்படும் போக்குவரத்து நெரிசல் 50 சதவீதம் குறையும், தற்தார் சாலை அமைப்பதற்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புறவழிச்சாலை பணி 80 சதவிதம் முடிந்துவிட்ட நிலையில் வரும் ஜூன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tiruthurapundi ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்