×

நாதஸ்வரம், மேளதாளம் முழங்க ஏற்றப்பட்டது செங்கல்பட்டிற்கு அரவைக்காக தஞ்சாவூரில் இருந்து 2,000 டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு

தஞ்சாவூர்: தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும். இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினி யோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். இந்நிலையில் நேற்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் தஞ்சாவூரிலிருந்து செங்கல்பட்டுக்கு 2000 டன் நெல் 42 வேகங்களில் சரக்கு ரயிலில் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Tags : Thanjavur ,Chengalpat ,Nathaswaram ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...