×

அரசு பள்ளியில் ஆண்டு விழா

ராசிபுரம்: ஆர்.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், பள்ளியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.  ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜாய்சி அன்னம்மாள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர்.சதாசிவம், ஒன்றிய குழு உறுப்பினர் நாராயணசாமி, வட்டார வள மேற்பார்வையாளர் சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி, கவிதை, நடனம், கட்டுரை, நாடகம், மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

அதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்கள் தனியாகவும், குழுவாகவும் இணைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : School ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி