×

சேந்தமங்கலம் அரசு பள்ளியில் விளையாட்டு போட்டிகள்

சேந்தமங்கலம்: காவல்துறை சார்பில், சேந்தமங்கலம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது. சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், காவல்துறையின் சார்பில் மனமகிழ் மன்றம் மூலம், மாணவர்களுக்கு சதுரங்கம், கேரம் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. உதவித் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.  சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். போட்டியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் பரிசு வழங்கி பேசுகையில், ‘காவல்துறையின் சார்பில் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒவ்வொரு மாணவரின் தனித்திறமையை வெளிக்கொண்டு வர வாய்ப்பு ஏற்படுகிறது,’ என்றார்.  நிகழ்ச்சியில் போலீஸ் எஸ்ஐ.,க்கள் சுப்பிரமணி, மோகன்ராஜ், தமிழ் ஆசிரியர் மாதேஸ்வரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Chendamangalam Government School ,
× RELATED கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும்