×

கரூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சங்கங்களுக்கு சிறப்பு விருது

கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சங்கங்களுக்கு சிறப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும், ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

நல்லுறவு தொழில் உறவினை பாதுகாக்கும், வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும். இந்த விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்தில் இருந்து ((https://www.lobour.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது விண்ணப்பத்தினை கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்திய விபரத்தையும், இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும், விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் நாளை ( 28ம் தேதி) வரை அனுப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Tags : Karur District ,
× RELATED அவரை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை