கரூர்: கரூர் பழைய அரசு மருத்துவமனை அருகே வைக்கப்பட்டுள்ள பேரிகார்டை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆஸ்பத்திரி சாலையும், வடக்கு பிரதட்சணம் சாலையும் இடத்தில், சாக்கடை வடிகால் பழுது நீக்குவதற்காக பேரிகார்டு வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடையூறாக இந்த பேரிகார்டு உள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது சிறு விபத்துக்களும் நடைபெற்று வருகிறது.