×

சக்குடி கிராமத்தில் மார்ச் 11ல் ஜல்லிக்கட்டு

மதுரை, பிப்.26: மதுரை அருகே சக்குடி கிராமத்தில் வரும் மார்ச் 11ம் தேதி ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவரும், முப்புலிசாமி கோயில் அறங்காவலர் குழு தலைவருமான ராஜசேகரன் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் முப்புலிசாமி கோயில் உள்ளது. இக்ேகாயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு மார்ச் 11ம் தேதி ஜல்லிக்கட்டு மிகவும் கோலாகலமாக நடக்கிறது. தேனி, திண்டுக்கல்,ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்கின்றன. முன்பதிவு பெற்ற காளைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்’’ என்றார்.

Tags : Jallikattu ,Chakkudi village ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்