×

திருச்சியில் தாய், மகன் மாயம்

தில்லைநகர், பிப்.26: திருச்சி உறையூர் பகுதியில் சகோதரி வீட்டில் வசித்த பெண் தனது 9 வயது மகனுடன் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி உறையூர்பாளையம் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் தவசீலன். இவரது மனைவி ராஜேஸ்வரி (33). தவசீலன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு கவின் (9) என்ற மகன் உள்ளார். கணவன் இறந்த நிலையில் ராஜேஸ்வரி தனது சகோதரி தனலட்சுமி வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியே சேர்ந்த சண்முகம் மனைவி ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்து அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்த கடந்த 23ம் தேதி அன்று ராஜேஸ்வரி தனது மகனுடன் வீட்டைவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சசேகாதரி தனலட்சுமி உறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தாய், மகனை தேடி வருகின்றனர்.

Tags : Trichy ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்