×

டாஸ்மாக்கில் தகராறு வாலிபர் மீது குண்டாஸ்

திருப்பூர்,பிப்.26: திருப்பூர் நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கயம் ரோடு புதுப்பாளையம் டாஸ்மாக் கடை அருகே கடந்த ஜனவரி 23ம் தேதி மது அருந்திக் கொண்டிருந்த ஒருவரை முன்விரோதம் காரணமாக, திருப்பூர் கல்லாங்காட்டை சேர்ந்த ரமேஷ் (27) என்பவர் தாக்கியுள்ளார். இதுகுறித்து நல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் ரமேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார். இதனையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரமேஷிடம் அதற்கான உத்தரவு நகல் நேற்றிரவு வழங்கப்பட்டது. நடப்பாண்டு இதுவரை ஐந்து பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Kuntas ,Voliber ,Tasmak ,
× RELATED மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு...