×

செல்வராஜ் எம்எல்ஏ அறிக்கை கரடிவாவியில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பல்லடம், பிப்.26: பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 22ம் தேதி விநாயகர் வழிபாடு, திருவிளக்கு வழிபாடு, கணபதி ஹோமம், குபேர லட்சுமி யோகம் உள்ளிட்ட யாக பூஜைக் ளுடன் தொடங்கியது. அதன்பின்னர் கோமாதா பூஜை, முளைப்பாரி ஊர்வலம், யாகசாலை பிரவேசம், முதல் கால வேள்வியும், 23ம் தேதி வேதபராணயம், மகாபூர்ணாகுதி மற்றும் பிரசாதம் வழங்குதல், விமான கலசம் வைத்தலும் நடைபெற்றது.

பின்னர் அன்று மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. அதை தொடர்ந்து மூல மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நான்காம் காலையாக பூஜை, நாடி சந்தானம், தீபாரணை நடைபெற்று காலை 10 மணிக்கு மேல் விநாயகர்,முருகர், கவைய- காளியம்மன்,பரிவார மூர்த்திகள்,கோபுர கலசங்கள், ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கவைய காளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா கமிட்டினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags : Selvaraj ,MLA ,Kaliyamman temple ,Karadivavi ,
× RELATED புதுச்சேரி அடுத்த சேதராபட்டு...