×

மேட்டுப்பாளையம் அருகே மூடப்படாத 7 அடி ஆழம் உடைய குடிநீர் வால்வு தொட்டியில் விழுந்த சினை மாடு

மேட்டுப்பாளையம், பிப்.26:  மேட்டுப்பாளையம் அருகே, மூடப்படாத 7 அடி ஆழமுள்ள  குடிநீர் வால்வு தொட்டியில் விழுந்த சினை பசு மாட்டை கிரேன் மூலம் பத்திரமாக   தீயணைப்புத்துறையினர் மீட்டனர். மேட்டுப்பாளையம் அருகே குருந்தமலை பஞ்சுக்காடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும்,விவசாய நிலங்களும் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் ரஞ்சித்குமார் (22) என்பவர் தனது வீட்டில் மூன்று பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை ரஞ்சித்குமார் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச்சென்றுள்ளார். மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சினையாக இருந்த மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் இருந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான மூடப்படாத 7 அடி ஆழமுள்ள குடிநீர் வால்வு தொட்டியில் விழுந்துள்ளது.

இதனையடுத்து பதறிய விவசாயி ரஞ்சித்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்க முயற்சி செய்துள்ளார். மேலும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் சுமார் 1  மணி நேரமாக போராடி கிரேன் மூலமாக சினை மாட்டினை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : Mettupalayam ,
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.1.17 லட்சம் சிக்கியது