துவரங்குறிச்சி: வையம்பட்டி அருகே மாட்டு வண்டியில் மணல் அள்ளியவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த வையம்பட்டி பகுதியில் முள்ளிப்பட்டி ஆற்றுவாரி பகுதியில் மணல் அள்ளுவதாக வையம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது தகவலைஅடுத்து ஆய்வு மேற்கொண்டனர் அப்போது மலையடிபட்டியை சேர்ந்த ஜோசப் அன்புராஜ் (42) என்பவர் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தார் அவரை கைது செய்து மேலும் மணல் அள்ள பயன்படுத்திய மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர் மூன்று சக்கர வாகனம் வழங்க நேர்முக தேர்வு.