×

திருவாரூர் அருகே சீனிவாசபுரத்தில் சேதமடைந்த பாலத்தை புதுப்பிக்க வேண்டும்

திருவாரூர்: தமிழக அரசின் பெரும் முயற்சியின் காரணமாக தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணியானது ரூ.114 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த சாலையில் திருவாரூர் அருகே சேதமடைந்த பாலத்தினை உடனடியாக புதுபித்து தர வேண்டும் என பொது மக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 67ல் தஞ்சையிலிருந்து நாகை வரையில் சாலை விரிவாக்க பணிக்காக கடந்த 2 வருடத்திற்கு முன்பு ஒன்றிய அரசு மூலம் 2ம் கட்டமாக ரூ 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் இந்த சாலை விரிவாக்க பணியானது ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணியினை காரணம் காட்டி ஏற்கனவே இருந்து வரும் சாலையானது மிகவும் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற சாலையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சாலையினை சீரமைக்க கோரி கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் 10 ஆண்டு காலமும் அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இதனை ஒன்றிய அரசும், அதிமுக அரசும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே எடுத்துக்கொண்டன. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சாலையினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து நெடுஞ்சாலைதுறை அமைச்சர் ஏ.வ.வேலு பெரும் முயற்சியின் காரணமாக ஒன்றிய அரசின் நிதி மூலம் ரூ 114 கோடியே 87 லட்சம் மதிப்பில் நாகையிலிருந்து தஞ்சை வரையில் இந்த சாலையினை சீரமைக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. இதற்கு காரணமான தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ள நிலையில் திருவாரூர் அருகே சீனிவாசபுரத்தில் இந்த சாலையின் குறுக்கே ஓடம்போக்கி ஆற்றிலிருந்து செல்லும் பாசன வாய்க்காலுக்காக சிறுபாலம் ஒன்று இருந்து வரும் நிலையில் இந்த சிறுபாலம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவது மட்டுமின்றி இதன் அருகே கிடாரங்கொண்டானில் இயங்கி வரும் அரசு கலை கல்லூரி மாணவர்கள் பலரும் இந்த சிறுபாலம் அருகே டூவீலரில் செல்லும் போது எதிரே வாகனம் வரும் பட்சத்தில் இடநெருக்கடி காரணமாக விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். இந்நிலையில் இந்த பாலத்தினை அகற்றி விட்டு அகலமான புதிய பாலம் கட்ட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த மழை காலத்தின் போது இந்த சிறுபாலமானது சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வாய்க்காலில் நீர் இல்லாத காரணத்தினால் இந்த நேரத்திலேயே இந்த சிறுபாலத்தினை அகற்றி விட்டு அகலமான பாலம் ஒன்று கட்டிதர வேண்டும் என பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். நுண்ணுரம் தயாரிப்பு மையத்திற்கு கொண்டு வரப்படும் மக்கும் குப்பைகளை பிளாஸ்டிக், கண்ணாடி, கல், போன்றவற்றை அகற்றி அதை இயந்திரம் மூலம் தூளாக்கி மக்கும் தொட்டிகளில் கொட்டப்பட்டு அதில் இயற்கை நுண்ணுயிர் கொண்ட பஞ்சகவ்யா இடுபொருள் தெளித்து முப்பது நாட்களில் நல்ல தரமான இயற்கை உரமாக மாற்றி அதை நெல், காய்கறி, பருத்தி, தானியங்கள், வாழை, தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.


Tags : Srinivasapuram ,Tiruvarur ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள...