விருதுநகர், பிப். 25: விருதுநகர் தேசபந்து மைதானத்தில தமிழக இளைஞர்கள், மாணவர்களை போதை கலாச்சாரத்தில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் இந்திய ஜனநாய வாலிபர் சங்க நகர செயலாளர் தீபக்குமார் தலைமையில் நடைபெற்றது. வழக்கறிஞர் சங்க மாவட்ட செயலாளர் சத்தியராஜ், பொறியாளர் ஊர்காவலன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். கையெழுத்து இயக்கத்தில், முதல் கையெழுத்தை நகர்மன்ற தலைவர் மாதவன் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.