×

பூண்டி ஏரியில் மூழ்கி மீனவர் பலி

திருவள்ளூர்: பூண்டி ஏரியில் மயங்கிவிழுந்து மீனவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கண்ணாளன் மகன் ஆனந்தன் ( 48). மீனவர். இந்நிலையில் இவர் நேற்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக பூண்டி ஏரிக்கு படகில் சென்றுள்ளார். பின்னர் மீன் பிடித்துக்கொண்டு பிற்பகல் படகில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆனந்தன் திடீரென மயங்கி படகில் இருந்து தண்ணீருக்குள் விழுந்துள்ளார். தகவலறிந்த  புல்லரம்பாக்கம் போலீசார், திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.  

நீண்ட நேரமாகியும் தீயணைப்பு துறையினர் வராததால் அப்பகுதி இளைஞர்கள் ஆனந்தன் உடலை தேடினர்.  ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏரி சேற்றில் சிக்கியிருந்த ஆனந்தனின் உடலை கிராம  மீட்டனர். புல்லரம்பாக்கம் போலீசார் ஆனந்தன் உடலை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர் ஆனந்தனுக்கு ரெபேகால் என்ற மனைவியும் விஷால் என்ற 11 வயதில் மகனும் உள்ளனர். 

Tags : Bundi lake ,
× RELATED மணலி புதுநகரில் கொசஸ்தலை ஆற்றின் கரைகள் சேதம்: சீரமைக்க கோரிக்கை