×

3வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி

தர்மபுரி, பிப்.24: தர்மபுரி மாவட்டத்தில் 3வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிக்காக, 3.46 லட்சம் டோஸ்கள் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 871 பசு மற்றும் எருமை இனங்கள் உள்ளன.இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 3வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ள 3 லட்சத்து 46,500 டோஸ் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள், மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வரும் 1ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலுமாக 3 வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக, கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது.  

மேலும், விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி, வரும் 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும். மேலும், விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனையை அணுகலாம். கால்நடை வளர்ப்போர் இவ்வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி, 100 சதவீதம் தங்களுடைய கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டரின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களின் கைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா