×

தம்பதியை தவறாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஆட்டோ டிரைவர் கைது

சிவகங்கை, பிப்.23:   சிங்கம்புணரி அருகே பிரான்மலையைச் சேர்ந்த அரசு ஊழியர் (39), இன்ஸ்டாகிராமில் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இவர் பதிவிடும் கருத்துகள் தொடர்பாக கடந்த 2022ம் ஆண்டு ஈரோடு தந்தை பெரியார் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆட்டோ ரஞ்சித் (எ) ரஞ்சித் குமாருக்கும்(42), இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் அரசு ஊழியர் மற்றும் மனைவியையும் தவறாக சித்தரித்து, ரஞ்சித் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டுள்ளார். இது குறித்து அரசு ஊழியர், சிவகங்கை மாவட்ட எஸ்.பி செல்வராஜிடம் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் ஆட்டோ ரஞ்சித்(எ)ரஞ்சித் குமாரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Instagram ,
× RELATED இன்ஸ்டாவில் இருந்து புகைப்படங்களை...