×

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் ஓசூரில் மீட்பு

சேலம், பிப்.23: சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த திருமணமான 22வயது இளம்பெண் கடந்த 7ம்தேதி கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் கடத்தப்பட்ட அந்த பெண் வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். அதில் தன்னை யாரும் கடத்தவில்லை. தனது தந்தை எனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துவிட்டார். அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது, எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அவர் சென்னையில் இருப்பதாக கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்றார். ஆனால் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனிடையே ஓசூரில் உள்ள ராஜாமணி என்பவரின் வீட்டில் இளம்பெண் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று போலீசார் அங்கு அதிரடியாக சென்று அவரை மீட்டனர். அவருடன் இருந்த சிலரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர். அந்த இளம்பெண் உண்மையாக கடத்தப்பட்டாரா? , இதற்கு யாரும் உடந்தையாக இருந்தனரா என விசாரணை நடத்தினர். 22 வயது இளம்பெண் என்பதால் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இன்று ஆஜர்படுத்துமாறு தெரிவித்ததையடுத்து அப்பெண்ணை விடுதியில் சேர்த்தனர். இன்று மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags : Hosur ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...