×

குச்சனூர்அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

சின்னமனூர்: சின்னமனூர் அருகே குச்சனூரில் குடியிருப்பவர் சரவணன். இவரின் மகன்கள் உதயன்ராமு (13), ஹவுசிக் ஹரிஹரன் (11) ஆகிய இருவரும் குச்சனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கொங்கு நாடு அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரியில் பாரதியார் தினத்தையொட்டி, கடந்த 18, 19 ஆகிய 2 நாட்கள் 14 வயதிற்கான மாநில அளவிலான ஆடவர் இறகு பந்தாட்டம் இரட்டையருக்கான போட்டியாக நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் 38 மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். அதன்படி இந்த சகோதர மாணவர்கள் சேர்ந்து விளையாடிய இறகு பந்து போட்டியில் தமிழ்நாடு அளவில் 4ம் இடத்தை பிடித்தனர். இதனை வரவேற்கும் விதமாக குச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி மற்றும் இறகுப்பந்து பயிற்சி ஆசிரியர்கள் வாஜிதுகனி, நவநீதன் ஆகியோர் இரட்டையர் மாணவர்களை பாராட்டினர்.

Tags : Kuchanur ,
× RELATED தேவாரம் பகுதியில் குறைந்து வரும் நாட்டு கோழி வளர்ப்பு