×

கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று துவக்கம்

தேனி: கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலமானது சாம்பல் புதன் கிழமையுடன் இன்று முதல் துவங்குகிறது. கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் இன்று முதல் துவங்குகிறது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்புத்திருப்பலியும், ஆராதனையும் நடைபெறுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு 3ம் நாள் உயிர்தெழுந்ததாக கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. இயேசு உயிர்தெழுந்த தினத்தை உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஈஸ்டர் பெருவிழாவிற்கு முந்தைய 40 நாட்களை கிறிஸ்துவர்கள் தவக்காலமாக அனுசரிக்கின்றனர். முதல் நாள் சாம்பல் புதன் கிழமையாக அனுசரிக்கப்படுகிறது. தவக்கால நாட்களில் கிறிஸ்துவர்கள் பெரும்பாலும் மீன், இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள். மேலும் வீடுகளில் ஆடம்பர நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும், திருமண நிகழ்வுகளையும் தவிர்த்து விடுவார்கள்.  

இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும் வண்ணம் வெள்ளிக்கிழமை தோறும் கத்தோலிக்க தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும்.  மேலும், ஆலயங்களில் இருந்து பங்கு மக்கள் ஒருகுழுவாக சேர்ந்த வேறு ஆலயங்களுக்கு திருயாத்திரை பயணம் செல்வார்கள். ஏழைகளுக்கு உணவளிப்பது, தர்மகாரியங்கள் செய்வது என நற்செயல்களில் ஈடுபடுவர். இந்தாண்டு ஈஸ்டர் பெருவிழா ஏப்.9ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  எனவே, அதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக அனுசரிக்கப்படும். இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனையும், பாடல் திருப்பலியும் நடைபெற உள்ளது. இந்த வழிபாட்டின்போது குருத்தோலை ஞாயிறன்று வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து தயாரிக்கப்பட்ட சாம்பலை பாதிரியார் மக்கள் நெற்றியில் பூசி, மனிதனே நீ மண்ணாக  இருக்கின்றாய். மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே என சொல்லியபடி சிலுவை அடையாம் இடுவார். இந்தாண்டு தவக்காலம் பிப்.22ம் தேதி தொடங்கி ஏப்.9ம் தேதி ஈஸ்டர் பண்டிகையுடன் முடிவடைய உள்ளது.

Tags : Christian ,
× RELATED அதானிக்கு எதிராக போராடியதால் கிறிஸ்தவ சபை வங்கி கணக்கு முடக்கம்